இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு, திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை தற்போது இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி அந்த படத்தை முடித்து விட்டு சூர்யாவுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.