புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடுகிறோம் என தள்ளி வைத்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இயக்குனர் சுகுமார், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது என்றும் செய்திகள் வெளியாகின. அதனால், படம் அடுத்த வருடத்திற்குக் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்றார்கள்.
இதனிடையே, சற்று முன் படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்கள். படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு அது. இதன் மூலம் பட வெளியீடு குறித்து மீண்டும் உறுதி செய்துள்ளது படக்குழு.