இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமாவில் ‛அழியாத கோலங்கள்' தந்து அகல் விளக்காய் ஒளிர வேண்டியவர் சிறு வயதிலேயே மரணித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி சென்றவர் நடிகை ஷோபா. இன்று அவரது 62வது பிறந்த நாளாகும். கே.பி.மேனன் - பிரேமா தம்பதியின் மகளாக 1962, செப்டம்பர் 23ல் மகாலட்சுமியாக பிறந்தார். 'பேபி மகாலட்சுமி' என்ற பெயரில் 'நாணல், தட்டுங்கள் திறக்கப்படும்' என தமிழ், மலையாள படங்களில் நடித்தார்.
தமிழில் பாலச்சந்தர் இயக்கிய 'நிழல் நிஜமாகிறது' படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து ‛ஒரு வீடு ஒரு உலகம், ஏணிப்படிகள், அழியாத கோலங்கள், அகல்விளக்கு, முள்ளும் மலரும், மூடுபனி, பசி' என நடித்து பிரபலமானார். பசி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதை கொண்டாட நினைத்த பசி இயக்குனர் துரை 1980, மே 1ல் சென்னையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் விழா நடக்க இருந்த அன்றைய தினம் தான் அவர்(17 வயது) தற்கொலை செய்து கொண்டார். அவரை பாராட்டி அணிய வாங்கப்பட்ட மாலைகள் அவரது உடலுக்கு போர்த்தப்பட்டது.
'பாலைவனச்சோலை' படத்தில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சுஹாசினி பாடும்போது 'எனக்கொரு மணமாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ...' என்று பாடுவார். ஷோபாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று பல தேசிய விருதுகளுடன் 62வது வயதிலும் அம்மாவாகவேனும் நடித்துக் கொண்டிருந்திருப்பார்.