சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் சின்னத்திரை, யூ-டியூப் மற்றும் அனைத்தும் சோஷியல் மீடியாக்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், மணிமேகலையின் பதிவுக்கு ஆரம்பத்தில் வாழ்த்துகள் சொல்லி பதிவிட்டிருந்த குரேஷி, பிரியங்காவுக்கு எதிராக விவகாரம் பெரிதானதும் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்மானத்தை பற்றியெல்லாம் மணிமேகலை இவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன அன்று, பிரியங்கா, திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை தான் குறுக்கிட்டு பிரியங்காவை பேசக்கூடாது என்று தடுத்தார்' என கூறியுள்ளார். குரேஷியின் இந்த பதிவானது மீண்டும் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.