வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லால் நடிப்பில் மூன்றாவது முறையாக லூசிபர்-2 இரண்டாம் பாகமாக உருவாகும் 'எம்பிரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடிப்பதற்கு மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட சில மடங்கு அதிகமாகவே ஊதியம் பெறுகிறார்.
இந்த நிலையில் மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான ஒரு புதிய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார் பிரித்விராஜ் இதற்கான முத்திரை கட்டணமாகவே 1.84 கோடி அவர் செலுத்தியுள்ளார். மும்பையில் அதிக பட வாய்ப்புகள் வருவதாலும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடப்பதாலும் தனக்கு அங்கே ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரித்விராஜ் இந்த வீட்டை வாங்கி இருப்பதாக தெரிகிறது.