பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. விஷால், தனுஷ் ஆகியோரை வைத்து புதிதாகப் படங்களைத் தயாரிக்க உள்ளவர்கள் சங்கத்தை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது அவர்கள் மீதான மறைமுகத் தடை விதிக்கும் ஏற்பாடு என்ற சர்ச்சை எழுந்தது.
இதன்பின் விஷால் தரப்பிலிருந்து பதிலுக்கு அறிவிக்கை ஒன்று வெளியானது. ஆனால், தனுஷ் அமைதி காத்து வந்தார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் நடிக்க ஒரு படம் ஆரம்பமாகி பின் நின்று போனது. அடுத்து செயலாளராக இருக்கும் கதிரேசன் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி நடித்துக் கொடுக்காமல் இருந்ததால்தான் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவுகளை அடுத்து தனுஷ் விவகாரம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதன் காரணமாக தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. டான் பிக்சர்ஸ் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இப்படத்தைத் தயாரிக்கிறார்.