''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'தி கோட்' படம் திரைக்கு வந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கிய 'பார்ட்டி' என்ற படமும் தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த பார்ட்டி படத்தை தயாரித்த டி.சிவா இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இந்த பார்ட்டி படத்திற்காக பிஜி-யில் இருந்து வர வேண்டிய சான்றிதழ் தாமதமானதால் படத்தின் வெளியீடு அப்போதைக்கு தடைப்பட்டது. ஆனால் விரைவில் சான்றிதழை பெற்று வருகிற டிசம்பர் மாதம் பார்ட்டி படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரேம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஒரு பாடலை பின்னணி பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.