வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், 'தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்று அரசு ஒரு கமிட்டி அமைத்து பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது' குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் “ஹேமா கமிட்டி விவகாரம் போல் தமிழ் திரையுலகில் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் பூதாகரமாக வெடித்திருக்கும். நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் படங்களில் நடித்துள்ளேன். நான் இதுவரை அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டதில்லை” என்றார்.




