மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர்களில் சிலர் தலா 1 கோடி நிவாரண நிதியை அறிவித்தனர். தமிழ் நடிகர்களில் முதலாவதாக நடிகர் சிம்பு இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து 6 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சிம்புவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்,” என எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
அதற்கு சிம்பு, “நன்றி பவன் கல்யாண் அவர்கள். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன்,” என பதில் நன்றி தெரிவித்துள்ளார்.