வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதங்கள் ஏற்பட்டது. தெலுங்கு நடிகர்களில் சிலர் தலா 1 கோடி நிவாரண நிதியை அறிவித்தனர். தமிழ் நடிகர்களில் முதலாவதாக நடிகர் சிம்பு இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து 6 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
சிம்புவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்,” என எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
அதற்கு சிம்பு, “நன்றி பவன் கல்யாண் அவர்கள். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன்,” என பதில் நன்றி தெரிவித்துள்ளார்.