டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் இளைய மகனான நடிகர் ஜீவா தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது பிளாக் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தனது தந்தையின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனது மனைவி சுப்ரியா உடன் காரில் பயணித்து வந்தார் ஜீவா. கள்ளக்குறிச்சி, கனியாமூர் அருகே கார் வந்தபோது குறுக்கே ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஜீவா அவரது மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




