மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் இளைய மகனான நடிகர் ஜீவா தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது பிளாக் என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தனது தந்தையின் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனது மனைவி சுப்ரியா உடன் காரில் பயணித்து வந்தார் ஜீவா. கள்ளக்குறிச்சி, கனியாமூர் அருகே கார் வந்தபோது குறுக்கே ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஜீவா அவரது மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.