டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சென்னை : குடிபோதையில் இரு வாலிபர்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் பிற மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர் மனோ. தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் படங்களிலும் பாடுகிறார். ஏராளமான இசை நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(20). மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடித்து விட்டு அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.
அப்போது குடிபோதையில் இருந்த பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் கிருபாகரனையும் அந்த சிறுவனையும் 5 பேர் சேர்ந்து அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது . இதில் கிருபாகரன் மற்றும் சிறுவன் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து மனோவின் மகன்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.




