ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இங்குள்ள முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவாவதிக்கவும், முடிவெடுக்கவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்துவது குறித்தும், நவம்பர் 1ந் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது.