''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து ஆகியோரின் காமெடி படங்களில் பட்டயகிளப்பியது. இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கி தந்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்துவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் சமீபத்தில் வடிவேலு தொடர்ந்தார். அதில் கடந்த பிப்ரவரியில் ஒரு யு-டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை அவதூறாக தரக்குறைவாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். எனவே சிங்கமுத்து எனக்கு ரூ. 5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என்னைப்பற்றி அவர் பேச தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இருவாரங்களுக்குள் சிங்கமுத்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் அவகாசம் அளித்து இருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு வாரகால அவகாசம் அவருக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.