இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஒரு காலத்தில் நடிகர்கள் வடிவேலு - சிங்கமுத்து ஆகியோரின் காமெடி படங்களில் பட்டயகிளப்பியது. இடையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பிரச்னைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கி தந்ததாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிங்கமுத்துவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் சமீபத்தில் வடிவேலு தொடர்ந்தார். அதில் கடந்த பிப்ரவரியில் ஒரு யு-டியூப் சேனலில் சிங்கமுத்து தன்னை அவதூறாக தரக்குறைவாக தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். எனவே சிங்கமுத்து எனக்கு ரூ. 5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும், என்னைப்பற்றி அவர் பேச தடை விதிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இருவாரங்களுக்குள் சிங்கமுத்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் அவகாசம் அளித்து இருந்தது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிங்கமுத்து தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் இரண்டு வாரகால அவகாசம் அவருக்கு அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.