ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பாடகியுமான ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயிலான அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஆண்ட்ரியா நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டு அண்ணாமலையார் கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா விழாக்களிலும் மற்ற விழாக்களிலும் மாடர்ன் உடையில் கொஞ்சம் கிளாமராக வருபவர் ஆண்ட்ரியா. கிறிஸ்வது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதக் கோயிலுக்கு போகும் போது பாந்தமாகச் செல்ல வேண்டும் என சுடிதார் அணிந்து சென்று வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவது வெற்றிக்குப் பின்னும் தெய்வீகம் பின்னால் இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகையான சமந்தாவும் இந்து மதத்தில் பற்று கொண்டவர். வட இந்தியாவிலும் பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அதேப்போல மலையாள நடிகையான கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த நயன்தாராவும் தமிழக மருமகளாகி பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வழக்கம் கொண்டவர் என்பதும் அவர்களது ஆன்மீகப் பற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது.