அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், யாரோ இவன் யாரோ, நான் போகிறேன் என்று தொடங்கும் இரண்டு பாடல்களை பின்னணி பாடியிருக்கிறார். இதற்காக கமலனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மெய்யழகன் படத்தின் இரண்டு பாடல்களுக்காக தனது அருமையான குரலை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி. உங்களது மெல்லிய குரல் உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.




