எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
'ஆர்ஆர்ஆர்' நடிகரான ஜூனியர் என்டிஆர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் பேரன், நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மகன் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஹரிகிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியான ஷாலினியின் மகன்தான் ஜூனியர் என்டிஆர். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தாத்தாவின் பாசத்தைப் பெற்றவர் என்பதால் அவர் சொல்லித்தான் அவருடைய பெயரான நந்தமூரி தாரக ராம ராவ் என்று சொல்லாமல் அவரை ஜூனியர் என்டிஆர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு என்டிஆர் குடும்பத்தால் சற்றே விலக்கி வைக்கப்பட்டார் ஜூனியர் என்டிஆர் என்பது தகவல்.
தனது அம்மாவின் நீண்ட நாள் கனவு ஒன்றை ஜூனியர் என்டிஆர் நிறைவேற்றியுள்ளார். அது குறித்து, “என்னை அம்மாவின் சொந்த ஊரான குந்தபுராவுக்கு அழைத்துச் சென்று, உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மட கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்ற அம்மாவின் கனவு நனவானது. செப்டம்பர் 2ம் தேதி அவரது பிறந்தநாளுக்கு முன்பாக இது நடைபெற்றது. இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசை நான் தந்திருக்க முடியாது. விஜய் கிரகந்தூர், எனது அன்புக்குரிய நண்பன் பிரசாந்த் நீல் ஆகியோர் என்னுடன் இணைந்து இதை நடத்தித் தந்தனர். எனது அன்பான ரிஷப் ஷெட்டிக்கும் நன்றி. இந்தத் தருணத்தை மிகவும் சிறப்பாக்கித் தந்து ஆதரவளித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் மடாதிபதிகள் அவரை வரவேற்ற, அவர் அங்கு ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் ஆகியோருடன் உணவருந்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைராகி உள்ளன.