மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து இறங்கு முகத்தில் இருந்து வந்தார். இந்த வருடம் அடுத்தடுத்து வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் மலையாளி பிரம் இந்தியா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை சரிவிலிருந்து ஓரளவு மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் இவர் தமிழில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் வெளியாகும்போது மீண்டும் தனது விட்ட இடத்தை இவர் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக சேகர வர்ம ராஜாவு என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு அவர் நடிக்கும் இரண்டாவது வரலாற்று படம் இது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சேகர வர்ம ராஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்த படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்குகிறார்.