மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் 5 நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எங்களை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து தவறு என்ற நடிகர் சங்கம் பதிளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க நேற்று நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள சினிமா ஸ்டிரைக், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.