ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து 9 சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை விசாரிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சிறை விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அனுமதிக்க கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 10 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி வழங்கினார். தொடர்ந்து போலீசார் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கும் மற்றவர்ளை வேறு சிறைகளுக்கும் மாற்றினர்.