விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து 9 சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை விசாரிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், சிறை விதிமுறை மீறல் குறித்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற அனுமதிக்க கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரேணுகாசாமி கொலையில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 10 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி வழங்கினார். தொடர்ந்து போலீசார் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கும் மற்றவர்ளை வேறு சிறைகளுக்கும் மாற்றினர்.