வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறும்போது “ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?. புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும்.
நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம். இந்த விஷயத்தை ஊதி பெருதாக்கி நீங்கள் (மீடியா) பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.




