நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறும்போது “ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?. புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும்.
நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம். இந்த விஷயத்தை ஊதி பெருதாக்கி நீங்கள் (மீடியா) பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.