டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா சில வருடங்கள் காதலித்த பின் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் பிரிந்தார்கள். அதற்கடுத்து நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபல்லாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. கடந்த வாரம்தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதற்கு சமந்தாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இதனிடையே, நேற்று சமந்தா அவரது இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் மற்றும் பதிவில் இருந்த வார்த்தைகளுக்கு விதவிதமான கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அவரது புகைப்படத்தில் அவருடைய டி ஷர்ட் வாசகம், 'The museum of peace & quiet” என இருக்கிறது. மேலும், அவரது வலது கை விரல்களில் நடுவிரலை தனது வலது கண் புருவத்திற்கு மேல் வைத்துக் கொண்டு 'போஸ்' கொடுத்திருக்கிறார். அந்த 'நடுவிரல்கள் யாரை நோக்கியோ காட்டுகிறது' என்றும், டிஷர்ட் வாசகங்கள் எதற்காக என்பது குறித்தும் பலவிதமான கமெண்ட்டுகளை ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். அவரது பதிவிற்கு 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.




