ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
இயக்குனர் சேரன் விதிமுறையை மீறி அதிக சத்தத்துடன் ஹாரனை ஒலிக்கவிட்டுச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் ஓட்டுனரை கண்டித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. புதுச்சேரியில் இருந்து சேரன் கடலூருக்கு தனது காரில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சேரன் பேருந்து ஓட்டுனர்களை மிரட்டினார் என்று போலீசில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் “இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.