கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ஓடிடி வந்த பிறகு உலக சினிமாக்கள் நமது வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பித்துவிட்டன. அதுபோல நமது சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீட்டுக்குள்ளும் சென்று சேர்கின்றன.
ஹாலிவுட், கொரியன் அதிகமாகப் பார்க்கும் நமது ரசிகர்களைப் போல, இந்தியத் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கும் ரசிகர்களும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் 100 கோடி வசூலைக் கடந்த படம் 'மகாராஜா'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
மற்ற இந்திய மொழிகளில் பெற்ற வரவேற்பை விடவும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தைப் பாராட்டி பல வெளிநாட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் “ஒரு அப்பாவின் அன்பு… யார் வேண்டுமானாலும் அப்பா ஆகலாம். ஆனால், அதற்குத் தகுதியா ஒருவர் மட்டும்தான் இருப்பாங்க,” என்று நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளது பலரையும் லைக் செய்ய வைத்துள்ளது.