நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தற்போது ஈகை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. இது அவரது ஐம்பதாவது படமாகும். அதையடுத்து ராம் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . இந்த நிலையில் தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற ஒரு படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்த அஞ்சலி, தற்போது பாஹிஷ்கரனா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் புஷ்பா என்ற கேரக்டரில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த தொடர் ஜி5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதோடு மூன்று நாளில் 35 மில்லியன் பேர் இதை பார்த்துள்ளார்கள்.
இதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் அஞ்சலி. அதில், ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் புஷ்பா என்ற அந்த ரோலில் நடித்தது சவாலானது தான் என்றாலும் எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது. எங்களது கதைக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் இதுபோன்ற ஆதரவு தான் என்னை மேலும் மேலும் புதிய கேரக்டர்களில் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.