லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தற்போது ஈகை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. இது அவரது ஐம்பதாவது படமாகும். அதையடுத்து ராம் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . இந்த நிலையில் தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற ஒரு படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்த அஞ்சலி, தற்போது பாஹிஷ்கரனா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் புஷ்பா என்ற கேரக்டரில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த தொடர் ஜி5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதோடு மூன்று நாளில் 35 மில்லியன் பேர் இதை பார்த்துள்ளார்கள்.
இதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் அஞ்சலி. அதில், ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் புஷ்பா என்ற அந்த ரோலில் நடித்தது சவாலானது தான் என்றாலும் எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது. எங்களது கதைக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் இதுபோன்ற ஆதரவு தான் என்னை மேலும் மேலும் புதிய கேரக்டர்களில் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.