ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தொலைக்காட்சி பிரபலமான தங்கதுரை தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டும் இந்த வேளையில் அடுத்ததாக அவர் செய்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. புது காரை வாங்கிய தங்கதுரை அந்த காரில் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் செல்லாமல் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று புதுத்துணி, உணவு வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார். தனது சுய சம்பாத்தியத்தில் ஏற்கனவே 3 ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் தங்கதுரை தற்போது ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் செய்துள்ள இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.