ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தொலைக்காட்சி பிரபலமான தங்கதுரை தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டும் இந்த வேளையில் அடுத்ததாக அவர் செய்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. புது காரை வாங்கிய தங்கதுரை அந்த காரில் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் செல்லாமல் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று புதுத்துணி, உணவு வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார். தனது சுய சம்பாத்தியத்தில் ஏற்கனவே 3 ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் தங்கதுரை தற்போது ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் செய்துள்ள இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.




