மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா |
தமிழில் ஏற்கனவே வெளியான பல சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் விக்ரமன் இயக்கி சூப்பர் ஹிட்டான சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்று ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் இயக்கிய சூர்ய வம்சம், வானத்தைப் போல என்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை. குறிப்பாக, வானத்தைப் போல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் அளவுக்கு இப்போதைக்கு நடிகர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த முயற்சிகளை கைவிட்டு விட்டேன். சூர்யா நடிப்பில் இயக்கிய உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டேன். ஆனால் பாதிக்கு மேல் அந்த ஸ்கிரிப்ட் வரவில்லை என்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன். அதனால் நான் இயக்கிய எந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதில்லை என்கிறார் விக்ரமன்.