வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தில் அறிமுகமாகி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவருக்கென ஒரு தனி பாதையை தமிழ் சினிமாவில் அமைத்துக் கொண்டுள்ளார். தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் தம்பி என வாரிசு நடிகராக இருந்தாலும் அவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்த ஒன்று.
2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி. டிவி சீரியல்களின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் மகள்தான் ஆர்த்தி. ரவி, ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இத்தனை வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினரிடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தகவல்.
ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா, மருமகனை கதாநாயகனாக வைத்து “அடங்க மறு, பூமி, சைரன்” ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இவற்றில் 'அடங்க மறு' மட்டுமே வெற்றிகரமாக ஓடிய படம். இந்த ஆண்டில் வெளிவந்த 'சைரன்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
கடந்த சில நாட்களாக ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவு விவகாரம் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மாமனார் குடும்பத்தினருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்தான் பிரிவு வரை கொண்டு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்கவும் முயற்சிகள் நடக்கிறதாம். இந்நிலையில் ஆர்த்தி தன் கணவர், மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா தளத்திலிருந்து நீக்கியது இந்த பிரிவு விவகாரத்தை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரது பிரிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதற்கடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவும் அதே போன்றதொரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.