ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடித்த 'கருடன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது விடுதலை 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கொட்டுக்காளி என்ற படமும் அடுத்து வெளியாக உள்ளது. இந்த படங்களுக்கு பின் ‛விலங்கு' வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.