ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றதுடன் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகவும் தற்போது வெளியாகி உள்ளது மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல கமர்சியல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகாராஜா திரைப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குரங்கு பொம்மை திரைப்படத்தில் தனது தந்தையை (பாரதிராஜா) கொன்றவனை நாயகன் விதார்த் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் வெட்டி விட்டு ஒன்றுக்கும் உதவாத நடைப்பிணமாக மாற்றுவார். அந்த அயோக்கியனின் மனைவி தனது முன்பாகவே வேறு ஒருவனுடன் சல்லாபிப்பதை பார்த்தும் கூட எதுவும் செய்ய முடியாமல் கண்களில் நீர் வழிவது போன்று ஒரு மானசீக தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
அதேபோல மகாராஜா படத்திலும் வில்லனான அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்த ஒரு செயல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று அவரையே கதற வைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு உந்தி தள்ளும் விதமாக ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன்.
அவரை பொறுத்தவரை கொடூரமான வில்லன்கள் உடனே சாவதை விட மானசீகமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை தன்னுடைய படங்களில் அடிநாதமாக வைத்திருக்கிறார் என்பது இந்த இரண்டு படங்களில் இருந்தும் தெரிகிறது.