மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றதுடன் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகவும் தற்போது வெளியாகி உள்ளது மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல கமர்சியல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகாராஜா திரைப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குரங்கு பொம்மை திரைப்படத்தில் தனது தந்தையை (பாரதிராஜா) கொன்றவனை நாயகன் விதார்த் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் வெட்டி விட்டு ஒன்றுக்கும் உதவாத நடைப்பிணமாக மாற்றுவார். அந்த அயோக்கியனின் மனைவி தனது முன்பாகவே வேறு ஒருவனுடன் சல்லாபிப்பதை பார்த்தும் கூட எதுவும் செய்ய முடியாமல் கண்களில் நீர் வழிவது போன்று ஒரு மானசீக தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
அதேபோல மகாராஜா படத்திலும் வில்லனான அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்த ஒரு செயல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று அவரையே கதற வைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு உந்தி தள்ளும் விதமாக ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன்.
அவரை பொறுத்தவரை கொடூரமான வில்லன்கள் உடனே சாவதை விட மானசீகமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை தன்னுடைய படங்களில் அடிநாதமாக வைத்திருக்கிறார் என்பது இந்த இரண்டு படங்களில் இருந்தும் தெரிகிறது.