தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றதுடன் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகவும் தற்போது வெளியாகி உள்ளது மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல கமர்சியல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகாராஜா திரைப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குரங்கு பொம்மை திரைப்படத்தில் தனது தந்தையை (பாரதிராஜா) கொன்றவனை நாயகன் விதார்த் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் வெட்டி விட்டு ஒன்றுக்கும் உதவாத நடைப்பிணமாக மாற்றுவார். அந்த அயோக்கியனின் மனைவி தனது முன்பாகவே வேறு ஒருவனுடன் சல்லாபிப்பதை பார்த்தும் கூட எதுவும் செய்ய முடியாமல் கண்களில் நீர் வழிவது போன்று ஒரு மானசீக தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
அதேபோல மகாராஜா படத்திலும் வில்லனான அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்த ஒரு செயல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று அவரையே கதற வைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு உந்தி தள்ளும் விதமாக ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன்.
அவரை பொறுத்தவரை கொடூரமான வில்லன்கள் உடனே சாவதை விட மானசீகமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை தன்னுடைய படங்களில் அடிநாதமாக வைத்திருக்கிறார் என்பது இந்த இரண்டு படங்களில் இருந்தும் தெரிகிறது.