டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாக இறங்க தயாராகி விட்டதால் அவரது 69வது படம் டிராப் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது, கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியல் பணிகளில் இறங்கி விட்டது உண்மைதான். என்றாலும் இந்த ஆண்டுக்குள் 69வது படத்திலும் நடித்து கொடுத்து விட்டுதான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அரசியல் கதையில் உருவாகும் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.




