ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாக இறங்க தயாராகி விட்டதால் அவரது 69வது படம் டிராப் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது, கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியல் பணிகளில் இறங்கி விட்டது உண்மைதான். என்றாலும் இந்த ஆண்டுக்குள் 69வது படத்திலும் நடித்து கொடுத்து விட்டுதான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அரசியல் கதையில் உருவாகும் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.