ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாக இறங்க தயாராகி விட்டதால் அவரது 69வது படம் டிராப் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது, கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியல் பணிகளில் இறங்கி விட்டது உண்மைதான். என்றாலும் இந்த ஆண்டுக்குள் 69வது படத்திலும் நடித்து கொடுத்து விட்டுதான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அரசியல் கதையில் உருவாகும் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.