ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்தவர் பிரதீப் கே விஜயன். ‛சொன்னா புரியாது' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தெகிடி, இரும்புத்திரை, ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தாண்டி படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்து தரும் பணியையும் செய்து வந்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது நண்பர்கள் இவரை அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து அவரது நண்பர்கள் பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாரின் உதவியோடு உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் அவருக்கு பிரச்னை எதுவும் இருந்ததா, மருந்து எதுவும் எடுத்து வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பிரதீப்பின் உடன் பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் திடீர் மறைவு, அதுவும் அவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கடந்தது சினிமா பிரபலங்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், அவருடன் பணியாற்றியவர்களும் வலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.