ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்தவர் பிரதீப் கே விஜயன். ‛சொன்னா புரியாது' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தெகிடி, இரும்புத்திரை, ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தாண்டி படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்து தரும் பணியையும் செய்து வந்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது நண்பர்கள் இவரை அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து அவரது நண்பர்கள் பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாரின் உதவியோடு உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் அவருக்கு பிரச்னை எதுவும் இருந்ததா, மருந்து எதுவும் எடுத்து வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பிரதீப்பின் உடன் பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் திடீர் மறைவு, அதுவும் அவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கடந்தது சினிமா பிரபலங்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், அவருடன் பணியாற்றியவர்களும் வலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.