கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மஞ்சும்மேல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நகைச்சுவை நடிகர் சவ்பின் ஷாஹிர் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி தனது சகோதரர் பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார். சுமார் 20 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 220 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிராஜ் வளையதாரா என்கிற பைனான்சியர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக தான் 7 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும், படம் வெளியான பிறகு வரும் மொத்த லாபத்தில் 40 சதவீத பங்கு தனக்கு தருவதாகவும் கூறிய மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் மோசடி செய்வதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போலீசார் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இன்னொரு பக்கம் இதன் மூலம் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறையும் இவர்கள் மீது தனது விசாரணையை ஆரம்பித்தது. இது குறித்து விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியது.
அதை அவர்கள் பொருட்படுத்தாத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தாங்கள் பணம் வாங்கிய நபருக்கு உரிய முறையில் பங்குத் தொகையை பிரித்தளிக்காமல் பேராசையின் காரணமாக தேவையில்லாத சிக்கலில் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்கள் மாட்டிக்கொண்டதாகவே திரையுலகத்தினரும் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.