கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன், 'சகாப்தம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'மதுரை வீரன்' படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடித்து முடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத்தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர்.
யானையை பின்புலமாக வைத்து இப்படம் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் யானை பாகனாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். படத்தின் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தனர். அந்த சமயத்தில் பல படங்கள் வெளியானதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். அதன்படி, மே 23 (நாளை) ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் மீண்டும் பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர். இது தொடர்பாக சண்முக பாண்டியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: படை தலைவன் திரைப்படம் மே 23ல் வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.