இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஜூன் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரப்போகிறது. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சுகர் பேபி' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் திரிஷா நடித்துள்ளார். மேலும், தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் மணிரத்னம் அடுத்த படம் குறித்து கூறுகையில், ''அடுத்தபடியாக ஓகே கண்மணி படத்தை போன்று காதல் கதையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதையடுத்து அந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக அமைந்தால் அடுத்தபடியாக அந்த படத்தை இயக்குவேன். அப்படி இல்லை என்றால் அந்த படத்தை பின்னர் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம். இதன்மூலம் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.