மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து, மற்றும் பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் திரிஷா. இதில் பொன்னியின் செல்வனில் அவர் நடித்த குந்தவை கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக்லைப்' படத்திலும் நடித்திருக்கிறார் திரிஷா.
இப்படத்தின் டிரைலரில் அவரது கேரக்டர் கவனம் பெற்றது. மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், தக்லைப் படத்தில் திரிஷா நடித்துள்ள வேடம் குறித்து கூறுகையில், ''இந்த படத்தில் திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான வேடம். குறிப்பாக பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு ஆப்போசிட்டான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது கேரக்டர் குறித்து முதலில் அவரிடம் சொன்னபோது, அது அவரை இம்ப்ரஸ் பண்ணியது. அதனால் இந்த வேடத்தை மிகவும் பிடித்து நடித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார் மணிரத்னம். அதனால் தக்லைப் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வேடத்தில் இருந்து ஒரு மாறுபட்ட, அதேசமயம் அதற்கு இணையான இன்னொரு முக்கியத்துவமான வேடத்தில் திரிஷாவும் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் இந்த வேடத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆனேன்'' என்று கூறியுள்ள திரிஷா, இப்படத்திற்காக ''கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் இருந்தது'' என்றும் தெரிவித்திருக்கிறார்.