இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நிமிடம் இடம் பெறுகின்றன என்கிற தகவலை அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் கதைக்கு திருப்பமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டியில் அவருடன் இணைந்து நடித்த விஜயகாந்த், தற்போது விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான இதில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்.