புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நிமிடம் இடம் பெறுகின்றன என்கிற தகவலை அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் கதைக்கு திருப்பமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டியில் அவருடன் இணைந்து நடித்த விஜயகாந்த், தற்போது விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான இதில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்.