சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் ஒரு நிமிடம் இடம் பெறுகின்றன என்கிற தகவலை அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எப்படி இருந்தாலும் கதைக்கு திருப்பமான ஒரு கதாபாத்திரமாக அது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டியில் அவருடன் இணைந்து நடித்த விஜயகாந்த், தற்போது விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான இதில் இடம் பெற்றுள்ளார் என்பதும் ஆச்சரியமான விஷயம் தான்.