ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். 45 வயதான பிரேம்ஜிக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக திருமண பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனையடுத்து ஒருவழியாக பிரேம்ஜிக்கு திருமணம் முடிவானதை ரசிகர்களும் வரவேற்றனர். பிரேம்ஜியின் சகோதரரும் இயக்குனருமான வெங்கட்பிரபு அதனை உறுதிப்படுத்தினார். இவர்களுக்கு நேற்றிரவு நிச்சயதார்த்தம் முடிந்து, இன்று (ஜூன் 9) திருத்தணி முருகன் கோவிலில் தனி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. வெங்கட்பிரபு தாலி எடுத்துக்கொடுக்க பிரேம்ஜி, மணப்பெண் இந்துவுக்கு தாலி கட்டினார். மகிழ்ச்சியில் மணப்பெண் இந்துவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் பிரேம்ஜி. இந்த வீடியோ வைரலானது.
திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ், அவரது மனைவியும் நடிகையுமான சங்கீதா போன்றவர் கலந்துக் கொண்டனர். கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா, அவரது மகன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இம்மாதம் இறுதியில் சென்னை தாஜ் ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.