டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

‛வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு துபாய்க்கு சென்ற ரஜினி, கடந்தவாரம் சென்னை திரும்பினார். பின்னர் மறுநாளே இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக இமயமலையில் எப்பவும் தான் சென்று வரும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ரஜினி இன்று(ஜூன் 5) மாலை சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : ‛‛தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக எனது அருமை நண்பர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேப்போல் எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். மத்தியில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இமயமலை பயணம் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் கிடைக்கிறது'' என்றார் ரஜினி.




