டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சூரி நடித்துள்ள 'கருடன்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சென்னையின் பல தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருடனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன்.
என் படங்களில் இனி கதை தான் ஹீரோவாக இருக்கும். நான் கதையின் நாயகனாக நடிப்பேன். இப்போதைக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காமெடி கதைகளும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
காமெடியனுக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் என்றார்.




