மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சூரி நடித்துள்ள 'கருடன்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சென்னையின் பல தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருடனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நம்பிக்கையாக இருக்கிறேன். அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன்.
என் படங்களில் இனி கதை தான் ஹீரோவாக இருக்கும். நான் கதையின் நாயகனாக நடிப்பேன். இப்போதைக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. காமெடியனாக நான் நடித்த பொழுது இருந்த ரசிகர்கள் இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் பொழுதும் வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து காமெடி கதைகளும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஹீரோவாக நடிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் காமெடி கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
காமெடியனுக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சூரியின் இடத்திற்கு வேறு நடிகர்கள் வருவார்கள். அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர்கள் வருவார்கள் என்றார்.