என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார்.
தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்குமார் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவர் கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் இணைந்து ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார், ராதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.