ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முக்கிய நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும், சிலர் இன்னும் தங்களை கதையின் நாயகன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதையின் நாயகர்களாக மாறிவிட்டார்கள். சந்தானம், யோகி பாபு சில படங்களில் கதாநாயகர்களாக நடித்துவிட்டார்கள். சூரி இப்போதுதான் இரண்டாவது படத்திற்கு வந்திருக்கிறார்.
அவர் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' படம் நாளை மறுதினம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. போட்டிக்கு வேறு முக்கிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் 'கருடன்' படத்திற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
படம் நன்றாக அமைந்துவிட்டால் மீண்டும் ஒரு வெற்றியைப் பறித்து நாயகனாகவும் பறக்க ஆரம்பித்துவிடுவார் சூரி.