ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமைகளுக்கான வியாபாரம் ஆரம்பமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு மிக அதிக விலையை சொல்கிறதாம். ஆனால், வினியோகஸ்தர்கள் அவ்வளவு விலையைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அதேசமயம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அட்வான்ஸ் தொகையாகத் தருகிறோம். ஆனால், அதை என்ஆர்ஏ அடிப்படையில் தர மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
புஷ்பா முதல் பாகத்திலேயே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினார்களாம். இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.