புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமைகளுக்கான வியாபாரம் ஆரம்பமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு மிக அதிக விலையை சொல்கிறதாம். ஆனால், வினியோகஸ்தர்கள் அவ்வளவு விலையைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அதேசமயம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அட்வான்ஸ் தொகையாகத் தருகிறோம். ஆனால், அதை என்ஆர்ஏ அடிப்படையில் தர மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
புஷ்பா முதல் பாகத்திலேயே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினார்களாம். இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.