டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

லைகா நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜு மகாலிங்கம். பின்னர் அதிலிருந்து வெளியேறி நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் ரஜினி அரசியல் வருகையை தவிர்த்து விட்டதை அடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ராஜு மகாலிங்கம் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜு மகாலிங்கம். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், தான் சொன்னது போலவே எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளார் ராஜு மகாலிங்கம்.




