ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. வழக்கமான சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை என்றாலும் அந்த படத்தின் கிளைமாக்சும், அதன் காரணமும் மக்களை கவர்ந்தது. படம் தற்போதும் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் பி.மணிவர்மனின் அடுத்த படம் தொடங்கி விட்டது.
இந்த படத்தை அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.
ஒரு நொடி படத்தில் நடித்த தமன் குமார் இதிலும் நடிக்கிறார். மால்வி மல்கோத்ரா ஹீரோயின். இவர்கள் தவிர மைத்ரேயா, ரக்ஷா செரின் அருன் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். கே.ஜி. ரத்திஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.