படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன் குமார். சில பல படங்களில் நடித்து விட்டு தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். எல்லோரும் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகும்போது தமன்குமார் மட்டும் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.
அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன். ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இன்னொரு பக்கம் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடித்ததை விட இப்போது அதிக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறேன். வானத்தை போல தொடரில் நான் நடித்து வரும் சின்ராசு கேரக்டரை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானது தான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இணைந்து பயணிக்க தீர்மானித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது எனக்கு இரு கண்கள் மாதிரி. என்கிறார் தமன்குமார்.