2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தமிழில் வெளியான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரத்தாளே சாட்சி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், பதில் சொல்வாள் பத்ரகாளி, கைகொடுப்பாள் கற்பகாம்பாள் ஆகிய பக்தி படங்களை இயக்கியவர் 'ஓம்சக்தி' ஜெகதீசன். தேவி தரிசனம், தாய்மூகாம்பிகை, சுப்ரபாதம் ஆகிய படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 95 வயதான அவர் முதுமை காரணமாக நேற்று காலமானார். உடல் இன்று மாலை போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ஓம் சக்தி ஜெகதீசனுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஒரே தாய் ஒரே குலம், இவர்கள் இந்தியர்கள் ஆகிய சமூக படங்களையும் இயக்கியுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ளார். சிவாஜி கணேசன் நடிப்பில், நடுக்கடலில் பயணம் செய்யும் கப்பலில் படமாக்கப்பட்ட 'சிரஞ்சீவி' என்ற படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். டி.வியில் ஒளிபரப்பான 'மகான் ராமானுஜர்' என்ற தொடரை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆர் நடித்த 'இதயக்கனி' படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு, சுமலதா நடித்த 'திசை மாறிய பறவைகள்' என்ற படத்தை இயக்கி, தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.