மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த பட படப்பிடிப்புக்காக சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற ரஜினி அங்கு அமிதாப் உடன் சில காட்சிகளில் நடித்தார். இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛வேட்டையன் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை விவகாரம் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்னை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார்.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‛தங்கமகன்' படத்தின் டிஸ்கோ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூலி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கூறி உள்ளார் ரஜினி.