இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என அடுத்து எந்த முன்னனி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை.
இதனால் தான் ஏற்கனவே இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இதன் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இது அல்லாமல் விரைவில் ஓடிடி தளத்திற்காக பூஜா ஹெக்டேவை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஜூனியர் என்டிஆர் உடன் தற்போது பேச்சுவார்த்தையை அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.