சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் தயாராகி கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்தப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் பத்து நண்பர்களில் ஒருவராக நடித்திருந்த சவ்பின் சாஹிர் என்பவர் தான், தனது பறவ பிலிம்ஸ் மூலமாக பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மலையாள சினிமாவில் முதன்முறையாக 200 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சிராஜ் வலையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் ஏழு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், படம் வெளியான பின் லாபத்தில் தனக்கு நாற்பது சதவீதம் பங்கு தருவதாக கூறப்பட்டதாகவும் ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் தனது முதலீட்டையும் லாப சதவீதத்தையும் தர மறுப்பதாகவும் எர்ணாகுளம் கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அதுவரை அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்த போலீசார் தற்போது மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் மீது எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.