ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

நடிகர் விஜய் நேற்று சென்னையில் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். தற்போது ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார் விஜய். மேலும் அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களும் போட்டோகிராபர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டளித்துவிட்டு சென்றார் விஜய்.
இந்த நிலையில் விஜய் மீது சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், விஜய் ஓட்டளிக்க வரும்போது தன்னுடன் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து வந்தார். இப்படி ஒருவர் மட்டுமே ஓட்டளிக்க 200 பேரை அழைத்து வந்ததால் அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்திருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படையில் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.




